ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சியையும் கண்களுக்கு குளிர்ச்சியையும் இனிதே வழங்குகின்றது. எதற்குமே ஒரு திட்டமிடல் வேண்டும். சுற்றுலா செல்லும்போது அது இன்றியமையாததாகி விடுகின்றது. ஊட்டியில் அமைந்துள்ள இடங்களை பார்வையிட திட்டமிடும் செயல் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கண்களுக்கு விருந்தளிக்ககூடிய காட்சிகளால் நமக்கு மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும், குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. அக்காட்சிகளின் தொகுப்பையை காண்போம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏதாவது ஒரு மலைப்பகுதிக்கு சென்று தூய காற்றை சுவாசிப்பது உடலுக்கும் நல்லது தானே.
1. ஊட்டி ஏரி (Ooty Lake)

ஊட்டி ஏரி 1984 ல் ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்ட ஒரு செயற்கை ஏரி. 65 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி. மீன்பிடி நோக்கத்திற்காக கட்டப்பட்ட இந்த ஏரி பிறகு சுற்றுலா அடையாளமாக மாறியுள்ளது. உள்ளூர் மீனவர்கள் மீன்பிடிக்க உதவுவதற்காக இந்த ஏரி அமைக்கப்பட்டது. கரையோரங்களில் பச்சைப்பசேல் என்று யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் ஒரு புறம் ரயில் பாதையும் உள்ளது. மே மாதத்தில் படகு போட்டிகளும் படகு பந்தயங்களும் இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஊட்டியில் அமைந்துள்ள மிகவும் முக்கிய சுற்றுலாத் தலம்.
ஊட்டி ஏரியில் பார்க்க வேண்டிய இடங்கள்: படகு சவாரி, சைக்கிள் ஓட்டுதல், குதிரை சவாரி, மினி ரயில் பயணம், கேளிக்கை பூங்கா. நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை.
2. தொட்டபெட்டா (Doddabetta Peak)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை. இதன் உயரம் 2623 மீட்டர்கள். தொட்டபெட்டா என்பது கன்னட மொழி. கன்னடத்தில் பெரிய மலை என்று பொருள். ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோத்தகிரி சாலையில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய குறிஞ்சி மலர்களின் நீல நிற மூடியால் மூடப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. தொட்டபெட்டாவுக்கு அருகிலுள்ள பிற இடங்கள்: தேயிலைத் தோட்டம், தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன், தண்டர் வேர்ல்ட்
3. பொடானிக்கல் கார்டன் (Ooty Botanical Gardens)

55 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா தமிழகத்தின் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படு வருகிறது. இன்றைய தாவரவியல் பூங்கா 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன. பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.
4. மலர் கண்காட்சி (Flower Show)

கலை மற்றும் கலாச்சாரங்கள் மூலம் இளம் உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பொடானிக்கல் கார்டனில் நடைபெறும் மலர் கண்காட்சி. பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் வெவ்வேறு வகையான மற்றும் பூக்கள் அலங்கரிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் பல படங்கள் கோடை விழாவின் போது சுற்றுலா பயணிகளுக்கு கண்காட்சியில் இடம்பெறும்.
Also Read: தமிழகத்தில் இருக்கும் கேரளாவின் கவிதை! எழில் மிகுந்த பத்மநாபபுரம் அரண்மனை!
5. வென்லாக் டவுன்ஸ் (Wenlock Downs)

வென்லாக் டவுன்ஸ் படப்பிடிப்புகளுக்கு பெயர் போன இடம் பச்சைப் பசேல் புல்வெளிகள், வயல்கள், மலைகள், யூகலிப்டஸ் மரங்கள் என பார்ப்பவரின் இதயத்தை கொள்ளைகொள்ளக் கூடிய இடம். உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலாத் தலம். கோல்ப் மைதானம் மற்றும் அரசு ஆடு பண்ணை கொண்ட ஜிம்கானா கிளப் வென்லாக் டவுன்ஸ் உள்ளது. அமைதியான நடைபயணம் செல்ல விரும்புவோர்க்கு வாழ்க்கை பற்றிய சிந்திக்க கூடியவர்களுக்கு ஏற்ற இடம்.
6. பைக்காரா ஏரி (Pykara Lake)

அக்டோபர் முதல் மார்ச் வரை பைக்காரா ஏரியைப் பார்வையிட சிறந்த நேரம் மாலை நேரங்களில் படகு சவாரி அல்லது நடைபயணம் மிகவும் வசதியாக இருக்கும். கரையோரங்களில் அடர்ந்த காடுகளின் நடுவே இந்த பைக்காரா ஏரி அமைந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏரியில் ஒரு படகு இல்லத்தைப் பராமரிக்கிறது. உள்ளே ஒரு படகு இல்லம், பார்வையாளர்கள் ஏரியைச் சுற்றிப் பயணம் செய்ய பயன்படுகிறது. முக்கிய சாலையில் உள்ள ஒரு பாலம், புகைப்படங்கள் எடுக்க ஒரு சிறந்த இடம். பைக்காரா நதியில் ஒரு அணையும் மின் உற்பத்தி நிலையமும் உள்ளன.
7. முகூர்த்தி தேசிய பூங்கா (Mukurthi National Park)

ஊட்டியின் சிறந்த மலையேற்றங்களில் ஒன்று. காலநிலை மற்றும் தோற்றம் இமயமலையின் பனிக்கு மைனஸுடன் ஒத்திருக்கிறது.காட்டில் பலவிதமான விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் பூச்சிகள் கூட உள்ளன. அவற்றில் மிகவும் பொதுவானது குரைக்கும் மான், இந்திய யானை, காட்டில் பூனை, காட்டு நாய்கள், சிறுத்தை, இந்திய சிறுத்தை, ஜாக்கல், போன்ற விலங்குகளும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பறவை பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக வனத்துறையால் கட்டப்பட்ட ஒரு சில கண்காணிப்பு கோபுரங்களும் உள்ளன. இயற்கையை நேசிப்பவர்களுக்கு ஏற்ற இடம். நீலகிரி மலைகளில் உயரமான நான்காவது மலை இதன் உயரம் 2,554 மீ (8,379 அடி).
8. பனிச்சரிவு ஏரி (Avalanche Lake)

நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 28 கிமீ தொலைவில் உள்ளது. பசுமையாக இருக்கும் பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது. ஏரியை சுற்றியும் மலைகள் மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் போர்த்தப்பட்டு மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. மலைகள் வழியாக விரைந்து வரும் நீர்வீழ்ச்சிகள் பார்ப்பதற்கு ரம்யமாகவும் இருக்கிறது. இரவில் வானில் தெரியும் நட்சத்திரங்களை பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள் அங்கேயே கூடாரம் அமைத்தும் தங்கலாம்.
9. க்ளென்மார்கன் (Glenmorgan)

க்ளென்மார்கன் – ஊட்டியில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் தேயிலை தோட்டங்களில் ஒன்றாகும். தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த அற்புதமான காட்சியால் இந்த இடம், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில், ரோப்கார் இரு முனைகளிலும் ஓய்வு இல்லங்கள் உள்ளன. குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்த இடத்திற்கு சுற்றுலா செல்ல ஏற்ற இடம். உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த இடத்திற்கு வருவதற்கு முன் ஒப்புதல் எடுக்க வேண்டும்.
10. ஊட்டி ஷாப்பிங் (Ooty Shopping)

ஷாப்பிங் ஆர்வலர்கள் ஊட்டியில் பல்வேறு பொருட்களை வாங்கலாம். ஊட்டியில் டீ இலைகள் அல்லது காபி பீன்ஸ் தேயிலை, தேன், யூகலிப்டஸ், துளசி, ஸ்ட்ராபெர்ரி, பச்சை ஆப்பிள் மற்றும் பல வகைகள் இங்கு கிடைக்கும். வீட்டில் தயாரிக்கப்படும் சாக்லேடகள் கிடைக்கும். டார்க் மற்றும் வெள்ளை சாக்லேட், கசப்பான சாக்லேட், உலர் பழங்கள், சாக்லேட், மற்றும் மிட்டாய்களில் கிடைக்கும். தோடர் பாணி பழங்கால நகைகள் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஷாப்பிங் மையங்களிலும் உள்ளன.
Also Read: சுற்றுலா செல்வோமா? – இயற்கையின் கொடை கல்வராயன் மலை
தேனி சுற்றுலா: தேனியில் பார்க்க வேண்டிய முக்கியமான 10 இடங்கள்!
கன்னியாகுமரி சுற்றுலா: நீங்கள் கண்டுகளிக்க சிறந்த 10 இடங்கள்…!