இன்று கொண்டாடப்படும் தைப்பூசம் – வரலாறு என்ன?

Date:

உலகம் முழுவதும் இன்று தைப்பூசம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அசுரர்களின் கொடுஞ்செயல்கள் அதிகரித்துவந்ததன் காரணமாக சிவ பெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து கந்தனை உருவாக்கினார். பேராற்றலின் வடிவமான அன்னை மீனாட்சி அசுரர்களை வதைக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியதே தைப்பூச திருநாளாகும். ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்கள் அனைத்திலும் தைப்பூச விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

thaipusam
Credit: Astro Ulagam

கார்த்திகேயன்

ருத்ரனின் காலக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாகினர். அவர்களை கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தார்கள். பின்னர் உமாதேவியின் அருளால் குழந்தைகள் ஒன்றிணைந்து ஆறுமுகன் தோன்றினான். இப்படி முருகன் உதித்த இடம் தான் பழனியில் இருக்கும் சரவணப்பொய்கை ஆகும். மேலும் அன்னையிடமிருந்து கந்தவேல் வேலை வாங்கியதும் பழனியில் தான். அதன்காரணமாவே மற்றைய திருத்தலங்களைக்காட்டிலும் பழனியில் தைப்பூச விழா வெகுவிமர்சியாகக் கொண்டாடப்படுகிறது. அதன்பின்னரே அசுரர்களை வதம் செய்து தேவர்களை காத்தார் கந்தன். சூரனை வதம் செய்த இடம் திருச்செந்தூர் ஆகும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, நார்வே என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

Thaipusam_
Credit: Holidays Calendar

விரதம்

மார்கழி அல்லது தை முதல் வாரத்தில் பழனி முருகனுக்கு துளசிமாலை அணிந்து விரதம் இருப்பார்கள் மக்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். பால்குடம், காவடி எடுத்தல், அலகு குத்துதல் என பக்தர்கள் தங்களது நேத்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

அசுரர்களை அழித்த வேலனை வழிபடுவதன் மூலமாக நம் மனதில் சூழ்ந்திருக்கும் பொறாமை, குரோதம், வன்மம் போன்றவைகளை அழிக்க முடியும். தைப்பூச நாளின் போது முருகனை வழிபட்டால், மனதில் இருக்கும் அச்சங்கள் விலகி ஆன்ம பலம் பெருகும். நம்மைச் சூழும் துயரங்களை தூள் தூளாக்கும் வலிமையுள்ள கந்தவேளினை இந்தத் தைப்பூச நன்னாளில் வணங்குவோம். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும்.

palani-muruganthanga-ratham
Credit: afterreceives.tk

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!