[வானியல் நிகழ்வு]: சூரியனுக்கு அருகில் செவ்வாய்! நடுவில் பூமி!! அக்டோபர் 13 அன்று வெறும் கண்ணுக்கே பெரிதாக தெரியும் செவ்வாய்!!

Date:

இயற்கை அழகு மிக்க கோள்கள், சூரியன், நிலவு, விண்கற்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் என அனைத்திலும் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கோள்களில் செவ்வாய் கோள் முக்கிய இடம் வகிப்பதால், அதை நோக்கி செயற்கைக்கோள்கள் முழு வீச்சில் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.

சூரியனுக்கு அருகில் செவ்வாய்!

கடந்த அக்டோபர் 6, 2020 அன்று பூமி – செவ்வாய் இடையேயான மிக நெருக்கமாக சந்திப்பு ஆராய்ச்சியாளர்களால் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது. இதைப் பற்றி நமது நியோதமிழ் தளத்திலும் எழுதியிருந்தோம். இதற்கு அடுத்தபடியாக, வரும் அக்டோபர் 13 ஆம் தேதி செவ்வாய் கோள் மற்றும் சூரியன் இடையேயான ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெற இருக்கிறது.

அக்டோபர் 13 – Opposition நிகழ்வு!

அப்படியென்ன நிகழ்வு என்கிறீர்களா? செவ்வாய் கோள் சூரியனுக்கு அருகில் இருக்கும் போது பூமியானது செவ்வாய் கோளுக்கும் சூரியனுக்கும் இடையில் காணப்படும். இந்நிகழ்வானது, ஒவ்வொரு 26 மாத இடைவெளியிலும் நிகழும். இது Opposition என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

mars-closest-to-sun-with-earth-in-between-2020-opposition
Credit: EarthSky

இதன் விளைவாக, சூரியன் பூமியில் மறையும் போது செவ்வாய் கோள் கிழக்கு அடிவானத்தில் உதிக்கும். சூரியன் பூமியில் உதிக்கும் போது செவ்வாய் மறையும். இந்த நாளில், வானத்தில் சிவப்பு கோளினை கண்டறிவதற்கு மிகவும் ஏற்ற காலம் ஆதலால், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கின்றன.

The earth in between the sun and the mars
இந்த படத்தில் இருப்பதை போன்று பூமி, சூரியனுக்கும் செவ்வாய் கோளுக்கும் நடுவில் இருக்கும்.

இந்த நிகழ்வின் போது, செவ்வாய் கோள் மிகவும் வெளிச்சமாகவும், பெரிய அளவிலும் தெரிவதால் தொலைநோக்கி உதவியின்றி வெறும் கண்களால் கண்டுகளிக்க முடியும்.

Did you know?
செவ்வாய் கோளினை வெறும் கண்களால் (உங்கள் உள்ளூர் வானிலையை பொறுத்து) நீங்கள் அந்தி முதல் விடியல் வரை எப்போதுமே காணலாம்.

கடந்த அக்டோபர் 6 அன்று செவ்வாய் கோள் பூமியை மிக குறைந்த 62 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் நெருங்கியது. இது, பூமியிலிருந்து நிலவின் தொலைவை விட 160 மடங்கு ஆகும். இந்த சந்திப்பானது, இதற்கு அடுத்தபடியாக வரும் 2035 ஆண்டு தான் நிகழும். அப்போது பூமி சூரியனிடமிருந்து மிகவும் அதிக தொலைவில் இருக்கும்; செவ்வாய் கோள் சூரியனுக்கு மிக அருகில் (Perihelion) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 3 ஆம் தேதி செவ்வாய் கோளானது பெரிஹீலியனை அடைந்தது. அப்போதிலிருந்து சூரியனிடமிருந்து மெதுவாக நகர்கிறது.

Oct 13 அன்று நடக்கப்போகும் Opposition நிகழ்வு
Oct 13 அன்று நடக்கப்போகும் Opposition நிகழ்வு | Credit: SkyMarvels.com

இந்த சந்திப்பானது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டில் செவ்வாய் கோள் வெறும் 57.6 மில்லியன் கிலோமீட்டர் (35.8 மில்லியன் மைல்) தொலைவில் நெருக்கமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு தொலைநோக்கி மூலம் மிகவும் பெரிதாக, தெளிவாக சிவப்பு கோளினை பார்ப்பதற்கு சிறந்த வாய்ப்பு இதுவாகும். ஏனென்றால், இந்த முறை செவ்வாய் கோள் வானத்தில் மிக அதிக நேரம் தெரியும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!