பூமி, சூரியனிடமிருந்து மூன்றாவது கிரகம். பூமியின் மேற்பரப்பில் சுமார் 29% நிலப்பரப்புகளாக கண்டங்கள் மற்றும் தீவுகளைக் கொண்டது. மீதமுள்ள 71% நீரால் மூடப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் பெருங்கடல் மட்டுமல்லாமல், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளாலும் இவை ஒன்றாக இணைக்கப்படுகின்றன. பூமியை நீலக்கோள் எனவும் குறிப்பிடுகின்றனர். பூமியின் துருவப் பகுதிகள் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டுள்ளன. பூமி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…
- பூமியை சுமார் 4.543 பில்லியன் ஆண்டுகள் பழமையானது.
- சூரிய குடும்பத்திலுள்ள மற்ற கோள்களைப் போலவே, பூமியும் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1674 கி.மீ என்னும் வேகத்தில் சுழல்கிறது. வினாடிக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் பூமி ஒரு முழு சுற்றுப்பாதையை முடிக்க 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் ஆகும்.
- பூமி அதன் ‘அச்சில்’ 23.4 டிகிரி சாய்ந்து கொண்டிருப்பதால், கிரகத்தின் நடுவில் நேராக ஒரு கற்பனைக் கோடு வட துருவத்தையும் தென் துருவத்திற்கு உருவாக்குகிறது. உலகின் வெவ்வேறு பகுதிகள் ஆண்டின் வெவ்வேறு நேரங்களில் (சுற்றுப்பாதையில் வெவ்வேறு நேரங்களில்) சூரியனை நோக்கி சாய்ந்திருக்கும்.
- விண்வெளியில் மிகப் பெரிய கோள்களில் பூமியும் ஒன்று. கிரகம் சுழலும்போது, சூரியனை எதிர்கொள்ளும் பக்கம் பகலைப் பெறுகிறது, மற்றொரு பக்கம் இருளில் உள்ளது.
- பூமியின் ஆரம் 6,371 கி.மீ (3958.8 மைல்).
- பூமியின் விட்டம் 12,742 (7918 மைல்) கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இது சூரிய மண்டலத்தின் ஐந்தாவது பெரியகோள். வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இன்னும் பெரியவை.
- சூரியனிலிருந்து பூமியின் தொலைவு 148.31 மில்லியன் கி.மீ.
- பூமியின் நிறை 5.97219 × 1024 கி.கி
- புவியின் சுழற்சி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் மட்டத்தில் அலைகள் உருவாகின்றன.
- பூமி ஒரே திசையில் அதாவது தற்சுழற்சியில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகின்றன.
Also Read: பூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?