கலைஞர் கருணாநிதி கூறிய 39 பொன்மொழிகள்

Date:

முத்தமிழ் அறிஞர், கலைஞர், மொழிக்காதலர், டாக்டர், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கூறிய பொன்மொழிகள்.

  1. அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது.
  2. தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.
  3. புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்… உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும்…
  4. நான் தாக்குதலைத் தாங்கிக்கொள்ளும் பழக்கமுள்ளவன் மாத்திரமல்ல, தாக்குதலை விரும்புகிறவனும்கூட. தாக்கப்பட்டால்தான் நானே கூட மெருகேற முடியும்.
  5. ஓயாமல் உழைத்த ஒரு தமிழன் இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான் என்று என் கல்லறையில் எழுதப்படும் எழுத்துக்களுக்காக நான் தவமிருக்கிறேன்.
  6. வீரன் சாவதே இல்லை… கோழை வாழ்வதே இல்லை…
  7. மோதிக்கொள்வது என்பது சாதாரண விஷயம். ஆனால், அதனால் ஏற்படுகிற பலன், விளைவு என்ன என்பதுதான் மிக முக்கியமான விஷயம்.
  8. தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.
  9. சட்டங்களால் மட்டுமே சாதி, பேதத்தை ஒழித்துவிட முடியாது. மனமாற்றமே அதை அகற்றும் மாமருந்து.
  10. துணிவிருந்தால் துக்கமில்லை.. துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை..
  11. பகைவனுக்கு அருளிடலாம். ஆனால், துரோகிகளுக்கு அருள்வது ஆபத்தானது. உலகில் இன்று துரோகிகள் அதிகம்.
  12. அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்.
  13. பெரியார் மலைப்பாறை. அந்த மலைகுடைந்து செதுக்கப்பட்ட மாமல்லபுரத்துச் சிற்பம் அண்ணா. நாமெல்லாம் அந்தச் சிற்பத்தின் மாதிரி வடிவங்கள்.
  14. ஒளியில்தான் நமது நிழலின் வடிவம் நமக்குத் தெரிகிறது. சோதனையில்தான் நமது நெஞ்சின் வலிமை நமக்குப் புரிகிறது.
  15. ‘முடியுமா நம்மால்’ என்பது ‘தோல்வி’க்கு முன்பு வரும் தயக்கம். ‘முடித்தே தீருவோம்’ என்பது ‘வெற்றி’க்கான தொடக்கம்.
  16. பாராட்டும், புகழும் குவியும் போது குட்டையான வாசலுக்குள், குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும். இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்..!
  17. குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும்… கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும்…
  18. தோழமையின் உயிர்த்துடிப்பே, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது.
  19. உண்மையை மறைக்க முனைவது, விதையை பூமிக்குள் மறைப்பது போலத் தான்…
  20. சட்டங்களால் மட்டுமே சாதிபேதத்தை ஒழித்துவிட முடியாது. மனமாற்றமே அதை அகற்றும் மாமருந்து.
  21. பகைவனுக்கு அருளிடலாம். ஆனால் துரோகிகளுக்கு அருள்வது மிகவும் ஆபத்தானது. உலகில் இன்று துரோகிகள் அதிகம்.
  22. சட்டத்தை பயன்படுத்தி சமூகத்தை ஒழுங்குபடுத்துவது என்பது சலவை செய்யப்பட்ட உடைகளுக்கு இஸ்திரிபெட்டி போடுவதுபோல. கொஞ்சம் கைதவறினாலும் சட்டைத்துணி கருகிவிடும்.
  23. பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள். பகைவர் முயற்சியினாலேயே தமக்குத் தாமே குழி வெட்டிக்கொள்வார்கள்.
  24. தென்றலை தீண்டியதில்லை. ஆனால், தீயை தாண்டியிருக்கிறேன்.
  25. நான் நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்.
  26. மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ; அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சிகிற வீரமும் ஆகும்.
  27. மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.
  28. இழிவு செய்யும் நண்பர்களை விட, எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்.
  29. தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் போது தன் மக்களின் முகம் சுண்டக் கூடாது என்பதில் குறியாக இருப்பது தாய்க் குணம்.
  30. வாழும் போது மனிதர்களைப் பிரித்துவைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்த பிறகாவது தணிந்துவிடுகிறதா?
  31. உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்… அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்.
  32. பதவி என்பது முள்கிரீடம் போன்றது.
  33. அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்… ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை.
  34. அணு அளவுகூட இதயமிலாத ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்?
  35. ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளிலிருந்து கணக்கிட்டு தெரிந்துகொள்ளலாம்.
  36. ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது.
  37. தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலே ஏற்படுவதை விட, அதிக அச்சம் உச்சி போய் சேரும் போது தான் தோன்றுகிறது.
  38. சிரிக்க தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனித தன்மைகளை உணர்ந்தவன்.
  39. கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதும் உண்டு.

Also Read: பாசிட்டிவ் எண்ணங்களை தரும் பொன்மொழிகள்

மகேந்திர சிங் தோனி பொன்மொழிகள்

மகிழ்ச்சி பற்றிய பொன்மொழிகள்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!