‘ஓர் ஏழையின் செல்வம், அவனது திறமை தான்…’ சீன தத்துவஞானி கன்பூசியஸ் பொன்மொழிகள்!

Date:

உலகப் புகழ் பெற்ற சீனத் தத்துவஞானி கன்பூசியஸ். ஒரு சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இளம் வயதிலேயே மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியராக விளங்கியவர். இவரின் சிந்தனைகளும் கருத்துகளும் தனிமனித வாழ்வு, அரசாட்சி, நீதி, நல்லொழுக்கம் மற்றும் சமூகம் சார்ந்ததாக இருந்தன.

  1. நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
  2. மனதைக் கடமையில் செலுத்துங்கள். ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். அன்புக்கு கட்டுப்படுங்கள். மேலான கலைகளில் மனதை செலுத்தி அமைதி பெறுங்கள்.
  3. தீயவற்றின் உற்பத்தி சாலை இதயம். தீயனவற்றை விற்கும் இடமே நாக்கு.
  4. அறிஞர்கள் சிந்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகிறார்கள்.
  5. உன்னத நெறிகளையும், உயர்ந்த மதியும், நேர்மையும் கொண்டவரே உயர்ந்த மனிதர்.
  6. உங்களுக்கு எதை மற்றவர்கள் செய்தால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களோ அதை நீங்களும் மற்றவர்களுக்கு செய்யாதீர்கள்.
  7. பெற்றோருக்கான தொண்டு, மேலோரிடம் மரியாதை, நண்பர்களிடம் நல்லுறவு, நாட்டுக்கான அர்ப்பணிப்பு, இவற்றைக் கொண்டவனே உண்மையில் கற்றறிந்தவன் ஆவான்.
  8. நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படை.
  9. ஓர் ஏழையின் செல்வம் அவனது திறமை தான்.
  10. ஒவ்வொன்றும் அழகுடையதே! ஆனால் எல்லோர் கண்களும் அதைக் காண்பதில்லை.
  11. பயத்தை மனதிற்குள்ளேயே பயிர் செய்பவன், பாம்பை மனதில் வளர்க்கிறான்.
  12. புகழைப் பொருட்படுத்தாதீர்கள். ஆனால், புகழ் பெறுவதற்கு தகுதி உடையவராக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  13. கோபம் தலை தூக்கும் போது, அதன் பின் விளைவுகளை சிந்தித்து பாருங்கள்.
  14. உயர்ந்த குணமுள்ள மனிதன்தான், எதைப்பற்றி யாரிடம் பேசுகிறோம் என்பதைக் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவான்.
  15. இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
  16. முன்னேற்பாடுகளைப் பொறுத்தே வெற்றி அமைகின்றது. முன்னேற்பாடுகள் இல்லாத செயல்பாடு கண்டிப்பாக தோல்வியிலேயே முடியும்.
  17. விவேகமான மற்றும் முட்டாள்தனமான மனிதர்களை மட்டும் ஒருபோதும் மாற்ற முடியாது.
  18. மனத் திடம் இல்லாத மனிதனால், வறுமையையும் சரி. செல்வநிலையையும் சரி. வெகுநாள் தாங்க முடியாது.
  19. இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும் போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர இலக்குகளை சரி செய்யக்கூடாது.
  20. வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நல்ல பெயரை எடுக்காமல் இறந்து விடுவோமோ என்று அச்சப்படுபவன் மதிக்கப்பட வேண்டிய மனிதன்.
  21. அறிவு, இரக்கம் மற்றும் தைரியம் ஆகியவையே உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களுக்கான மூன்று தார்மீக குணங்கள்.
  22. அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.
  23. உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகிறோம்.
  24. தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைதான் இந்த உலகம் விரும்புகிறது.
  25. ஒழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் உள்ளவன் வேறு எதைப்பற்றியும் கவலையோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை.
  26. சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
  27. எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.
  28. துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தை கடந்து விட்டோம் என்பது உறுதி.
  29. நமக்கு வாழ்க்கையைப்பற்றி தெரியாது என்றால், எப்படி மரணத்தைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும்?
  30. நீங்கள் உங்களுக்கு எதை செய்யவில்லையோ அதை மற்றவர்களுக்கும் செய்யாதீர்கள்.
  31. வெறுப்பது எளிதானது, விரும்புவது கடினமானது; அதுபோல, அனைத்து நல்ல விஷயங்களையும் அடைவது கடினமானது, கெட்ட விஷயங்களைப் பெறுவது எளிதானது.
  32. உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது, ஆனால் நாம் வலியுறுத்தி அதனை சிக்கலானதாக மாற்றுகின்றோம்.
  33. எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.
  34. நம்முடைய மிகப்பெரிய பெருமை விழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கின்றது.
  35. உங்களுக்கு என்ன தெரியும் மற்றும் என்ன தெரியாது என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
  36. முன்னேற்பாடுகளைப் பொறுத்தே வெற்றி அமைகின்றது, முன்னேற்பாடுகள் இல்லாத செயல்பாடு கண்டிப்பாக தோல்வியிலேயே முடியும்.

Also Read: நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!