‘சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்’ சேமிப்பு பற்றிய 35 பொன்மொழிகள்!

Date:

  1. இளமையில் உன் சேமிப்பு மட்டுமே. முதுமையில் உனக்கு கை கொடுக்கும். அடுத்தவரை நம்பி வாழும் வாழ்க்கை நரகம் போன்றது.
  2. சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல. செலவு செய்யும் விதம்.
  3. சிக்கனமாக இருந்தால் யாரும் வறியவராக முடியாது.
  4. சிறிய செலவுகளில் கவனம் கொள்ளுங்கள். ஒரு சிறிய கசிவு மிக பெரிய கப்பலை மூழ்கடிக்கும்.
  5. நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மீறிய செலவு செய்யாமல் இருப்பதாகும்.
  6. செல்வதுடன் இருக்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதை போல் சேமிப்பிலும் கவனம் வேண்டும்.
  7. சிக்கனம் நமது வாழ்க்கையை அழித்து விட கூடியதாக இருக்க கூடாது. மாறாக சிக்கனம் நம் வாழ்க்கைக்கு உயிர் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
  8. சிக்கனமும் சேமிப்பும் செல்வம் பெருக உதவும்.
  9. பணம் உங்களை வந்தடையும் முன் அதை ஒருபோதும் செலவிட வேண்டாம்.
  10. ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன் வாங்கும் போது எதிர்கால சுயத்தை கொள்ளையடிக்கிறீர்கள்.
  11. பேராசை கொண்ட மனிதனுக்கு உலகத்தையே கையில் கொடுத்தாலும் திருப்தி உண்டாவதில்லை.
  12. ஏழையாய் இருப்பதில்லை என்று உறுதியாக முடிவு செய்யுங்கள்.
  13. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு மிக அவசியம்.
  14. நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள். இரண்டையும் சிறப்பாக பயன்படுத்துங்கள்.
  15. சேமிப்பு செழித்து வளர சிறந்த வழி சிக்கனம்.
  16. செலவழித்த பின் எஞ்சியதை சேமிக்க வேண்டாம். சேமித்த பின் எஞ்சியதை செலவிடுங்கள்.
  17. என்றும் நினைவில் வைத்திருங்கள் சேமிப்பு என்பது முதலீட்டின் முன்நிபந்தனை.
  18. வீண் செலவுகளை தவிர்த்து சேமியுங்கள் அது உங்களை காப்பாற்றும்.
  19. பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்கு பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
  20. சம்பாதிப்பவனை விட சேமிப்பவனே சிறந்தவன்.
  21. சேமிப்பை உதாசீனம் செய்பவன் தன் வாழ்வில் ஒருநாளும் செழிமையை கொண்டுவர முடியாது.
  22. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தன் ஆவான்.
  23. சிக்கனமே செல்வம்.
  24. தகுதிக்கு மேல் வாழ்வதே தரித்திரம் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.
  25. சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும்.
  26. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான ஒரே வழி அல்ல. ஆனால் பெரும்பாலான சூழ்நிலையில் பணத்தை அடிப்படையாக வைத்தே மனிதன் மதிப்பிடப்படுகிறான் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
  27. சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
  28. செல்வாக்கு நீடித்திருக்க வேண்டுமானால் செல்வத்தைப் போலவே அதையும் சிக்கனமாகவே செலவு செய்ய வேண்டும்.
  29. செலவழிக்கும் பணத்துக்கு கணக்கு எழுதிவை. செலவழித்தது அவசியம் தானா என்று சிந்தித்து பார். சிக்கனம் தானாகவே வந்துவிடும்.
  30. கஞ்சத்தனம் என்பது சிக்கனத்தின் போலியான உணர்வு.
  31. எதிர்கால பொறுப்புடன் செயல்படுவது சிக்கனம்.
  32. சிக்கனமாக இல்லாமல் யாரும் செல்வந்தராக முடியாது.
  33. வளத்தின் ஒரு கை உழைப்பு. ஒரு கை சிக்கனம்.
  34. வாழ்க்கை ஒரு போர்க்களம் அதில் சிக்கனமாக இருத்தல் என்பது பாதி வெற்றிக்கு சமம்.
  35. எப்பொழுதும் உங்களிடம் இருப்பதை விட குறைவாகவே செலவு செய்யுங்கள்.

Also Read: ‘உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்’ பணம் பற்றிய…

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய 25 தத்துவங்கள்…

உங்கள் மனதில் நேர்மறை எண்ணம் தோன்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 14 வழிகள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!