அன்னை தெரசா அவர்கள் சிறந்த சமூக சேவகராகவும் ஏழை எளியோருக்கும் ஆதரவற்றோர்க்கும் ஆதரவாக இருந்தவர் என்று உலகம் முழுவதும் புகழப்பட்டவர். அமைதிக்கான நோபல் பரிசும் இந்தியாவின் சிறந்த விருதான பாரத ரத்னா விருதும் பெற்றவர்.
அன்னை தெரசா பொன்மொழிகள்
- புன்னகையே அன்பின் ஆரம்பம்.
- அன்பின் அட்சய பாத்திரம்! கருணையின் உண்மை உருவம்! தாய்மையின் உன்னத அடையலாம்
- பெரிய சாதனைகளை செய்யாமல் துன்பப்படுவதை விட, சிறிய சாதனைகளை முழு அன்புடன் செய்து முடிக்கலாம்.
- நம்மை சூழ்ந்துள்ள இடங்கள் சுத்தமாக இல்லை என்றால், மேடை அமைத்து பேசும் நேரத்தில் சிறிது நேரத்தை கொண்டு நாமே சுத்தம் செய்யலாம்.
- நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.
- வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும்வரை.
- அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.
- வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.
- நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.
- வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.
- மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.
- உண்மையான அன்பு வலிக்கும், வதைக்கும், வெறுமையாக்கும்.
- அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே உன் ஆற்றல்
- அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கின்றோம்.
- ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
- ஆனந்தம் ஆற்றல் மிக்கது.
- வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.
- உனக்கு உதவியோரை மறக்காதே; உன்னை நேசிப்பவரை வெறுக்காதே; உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.
- தனிமையே நவீனத் தொழுநோய்.
- எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.
- இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்?
- உங்களுடைய கனவுகளோ வாழ்க்கை லட்சியங்களோ மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக இருந்தால் அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும்.
- உலகின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது.
- தண்டனைத் தர தாமதி; மன்னிக்க மறு சிந்தனை வேண்டாம்.
- பிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வரவேண்டுமானால், அத்துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.
- சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.
- நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.
- இறக்கத்தான் பிறந்தோம் அது வரை இரக்கத்தோடு இருப்போம்…!
- எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்? கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்
- அமைதியின் பலன் பிரார்த்தனை, பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை, நம்பிக்கையின் பலன் அன்பு, அன்பின் பலன் சேவை, சேவையின் பலன் அமைதி.
- நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால் அதை நாம் செய்யாவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா?
- தலைவன் ஒருவனுக்காக காத்திருக்காதீர்கள்.உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச்செல்லுங்கள்.
- கொடுப்பது சிறிது என்று தயங்காதே பெறுபவருக்கு அது பெரிது. எடுப்பது சிறிது என்று திருடாதே இழந்தவருக்கு அது பெரிது.
- பிரார்த்தனை செய்யுங்கள் கடவுள் அருகே நீங்கள் போகலாம்! பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்குப் பதிலாகச் சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகே வருவார்…
- இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்.