- மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்.
- பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு.
- புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கியை விட பெரிய ஆயுதங்கள், புத்தகங்களே.
- நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே. நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்து முடி.
- அச்சத்தை விட ஆபத்தை ஒருமுறையாவது சந்திப்பது மேலானது.
- காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்.
- தோல்விகளை ஒப்புக்கொள்ளத் தயங்காதே, தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
- தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியமும் அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும் தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
- நூலகம் இல்லாத ஒரு ஊரை நான் ஒரு ஊராகவே மதிப்பதில்லை.
- எல்லோரையும் திருப்தி வைப்பவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
- அனைவரையும் நேசி. சிலரை மட்டும் நம்பு. ஒருவரைப் பின்பற்று ஆனால் ஒவ்வொருவரிடமும் இருந்து கற்றுக்கொள்.
- நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட. இலட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து. உலகம் உன்னைப் போற்றும்.
- அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய் உண்மை ஆகி விடும்.
- போராட்டம் இல்லையேல் வாழ்க்கை இல்லை.
- உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை மேல் எழும்பிவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்.
- மக்கள் புரட்சி எப்படி உருவாகும். மக்கள் இனி வாழ வழியில்லை என்று எண்ணும் போது புரட்சி வெடிக்கும்.
- பிறரிடம் நீ எந்த குணத்தை வெறுக்கிறாயோ. அந்தக் குணத்தை உன்னிடம் வைத்துக் கொள்ளாதே.
- தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியமும். அவற்றை விரைவில் திருத்தி கொள்வதற்கான வலிமையையும் தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
- நீ ஏழையாக பிறக்க நீ காரணமில்லை. நீ ஏழையாக இருக்க வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை.
- அன்பை இழப்பது என்பது கொடிய நோய். குழந்தைகளிடம் எதையும் திணிக்காதீர்கள். அவர்களின் அறிவை தூண்டி பிரகாசிக்க வையுங்கள்.
- சுதந்திரம் விலை மதிப்பற்றது. ஆனால் அதை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
- நாம் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயல்பட்டால் தான் நமது போராட்டத்தில் நம்மால் வெல்ல முடியும்.
- மத ஒழுக்கநெறி என்ற சொற்தொடர் தான் மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டு ஏமாளிகளாக வைத்திருக்கிறது.
- புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் சாத்தியமல்ல.
- உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.
- கற்றறிதல், ஒழுங்கமைத்தல், ஒன்றுபடச் செய்தல், போராடுதல் ஆகியவற்றின் மூலம் இளைஞர்கள் தம்மையும் பயிற்று வித்துக் கொண்டு இளைஞர் சமூகத்திற்கும் பயிற்றுவிக்க வேண்டும்.
- நச்சரிக்கும் வீட்டு வேளைகளில் இருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனிதகுல விடுதலை சாத்தியமே இல்லை.
- முடிந்து போனவை என்று உதாசீனம் செய்யாதீர்கள்.
- நினைத்து பார்க்கவோ நெகிழ்ந்து போகவோ இறந்த காலத்தில் தான் எல்லாம் இருக்கிறது.
- வாழ்க்கைக்காக போராடுகிறோம், போராட்டத்தில் வாழ்கிறோம்.
Also Read: ‘வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது’ மாவீரன் நெப்போலியன் கூறிய 30 சிறந்த பொன்மொழிகள்!