மாவீரன் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவர். பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். மாவீரன் நெப்போலியன் கூறிய பொன்மொழிகள் இங்கே…
- சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது தூங்குகிறான், சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.
- உன்னை வெற்றி கொள்ள யாரும் பிறக்கவில்லை என்று நினைக்காதே. எல்லோரையும் வெற்றி கொள்ள நீ பிறந்திருக்கிறாய் என நினைத்துக்கொள். வெற்றி உன் பக்கம்.
- தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வி அடைவான்.
- காலத்தின் அருமையைப் புரிந்துகொள்ளாதவர்கள் வெற்றி அடைய முடியாது.
- தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும்.
- உலகில் வெற்றி பெற வேண்டுமானால் ஏற்கெனவே நீங்கள் வெற்றி பெற்றுவிட்ட மாதிரி மற்றவர்களுக்கு தெரிய வேண்டும்.
- இலட்சியத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிகளை மட்டுமே மாற்றிக்கொள்ள வேண்டும்.
- நீ உன் வலது காலை முன்னே எடுத்து வை. உன் இடது கால் தானாகவே முன்னால் வந்துவிடும்.
- தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள். நல்ல காரியங்களை செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்..
- வீரமில்லாத மக்களைக் கொண்ட நாடு அடிமை நாடாகவே இருக்கும்.
- பொதுவாக தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதியாகத் தீர்மானித்தலே.
- வெற்றி எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது.
- கற்பனை வளமே இந்த உலகை ஆள்கிறது.
- என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள் நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.
- முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.
- இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்து விடுங்கள்.
- நாளை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது மகிழ்ச்சியுடன் உழைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எந்த நாளும் இன்பமான நாள் தான்.
- குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் தான் தங்கியிருக்கிறது.
- ஒரு வீரனுக்கான முதல் தகுதி. சோர்விலும் பொறுமையாக இருப்பது. தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.
- ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பு இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்றுப் போய்விடுகிறது.
- நாளை நாளை என ஒரு செயலை பிற்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.
- நம்பிக்கை என்ற ஒரு வார்த்தையின் முன்னால் துன்பங்கள் எல்லாம் நீங்கி விடுகின்றன.
- வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- நட்புக்கு உயிரைக் கொடுப்பது இலகுவானது, ஆனால் உயிரைக் கொடுப்பதற்கு தகுதியான நட்பு கிடைப்பது அரிது.
- நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை அமைதியான மனமே.
- நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளுகிறோமே தவிர, நமது திறன்களைப் பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை.
- நீங்கள் ஒரு செயலை சிறப்பாக செய்ய விரும்பினால், அதை நீங்களே செய்யுங்கள்.
- வெற்றி கிடைக்குமோ என்ற ஐயம் நிச்சயம் தோல்வியை நோக்கியே கொண்டு செல்லும்.
- இறக்கும் நேரத்தை விட, துன்பப்படும் நேரத்திலேயே நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகிறது.
- சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதை செயல்படுத்தும்போது, அது குறித்து சிந்திப்பதை நிறுத்திவிடுங்கள்.
Also Read: ‘வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு. ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது..!’ ஓஷோ…