‘அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது’ நபிகள் நாயகம் கூறிய சிறந்த 28 பொன்மொழிகள்

Date:

  1. உண்மையான அடக்கம் எல்லா நல்ல பண்புகளுக்கும் அடிப்படை.
  2. மனிதன் பிறப்பால் ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவனாக மாட்டான். ஆனால் ஒழுக்கத்தால் மனிதன் மற்றவனை விட உயர முடியும்.
  3. வெளிப்படையாயினும் மறைவானவையாயினும் மானக்கேடான செயல்களில் அருகே கூட செல்லாதீர்கள்.
  4. நல்ல அறிவு எந்த மூலையில் எவ்வளவு தூரத்தில் இருந்த போதிலும் அதைத் தேடிச் செல்லுங்கள்.
  5. அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது.
  6. எல்லா விதமான அடக்கம் உடைய செயல்களும் சிறந்தவையே.
  7. எவன் சாந்த குணத்தை பெற்று இருக்கிறானோ அவன் நன்மையான பகுதியை உடையவன்.
  8. பேராசை வறுமையை குறிக்கிறது. அவாவின்மை செல்வத்தை குறிக்கின்றது.
  9. கைத்தொழிலும் மோசடி இல்லாத வியாபாரமும் தூய்மையான சம்பாத்தியம்.
  10. எவனுடைய சொல்லும் செயலும் பிறரைத் துன்புறுத்த மாட்டாதோ அவனே மனிதன்.
  11. மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம்.
  12. முதியோருக்கு மரியாதை செலுத்துதல் இறைவனுக்கு மரியாதை செலுத்துவது ஆகும்.
  13. மக்கள் விரும்பாத இரண்டு, மரணமும் வறுமையும்.
  14. எந்த ஒரு செயலிலும் உணர்ச்சிவசப்படாத சகிப்புத்தன்மையும் நிதானமும் சிறப்புக்குறியவை.
  15. மதம் என்பது தூய்மையான வாக்கும் கொடையும் ஆகும்.
  16. தன்னிடம் உள்ள குறைகளை அறிந்தும் பிறரது குறைகளை கூறித் திரியக்கூடாது.
  17. நற்செயல்களில் உறுதியாக நில்லுங்கள். தீய செயல்களை விட்டு விலகி இருங்கள்.
  18. நல்ல முறையில் பழகத் தெரிந்தவனும் நற்குணமுள்ளவனும் நண்பர்களுள் சிறந்தவன்.
  19. உலக ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் பிறப்பிடம்.
  20. பிறரை சபித்தல் உண்மை பேசுவோருக்கு அழகல்ல.
  21. அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்டு களித்திருப்பவன் உண்மையான மனிதனாக மாட்டான்.
  22. தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே விரும்பி வருந்துபவன் குற்றம் இல்லாதவனுக்கு ஒப்பாவான்.
  23. வயது முதிர்ந்த பெற்றோரை புறக்கணிக்கும் எவனும் சொர்க்கத்தை அடைய முடியாது.
  24. பிறப்பால் அனைவரும் தூய்மையானவர்களே ஒருவர் செய்யும் பாவமே அவரை கலங்கப்படுத்துகிறது.
  25. நட்பு கொள்ளும் முன் நாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதை கவனித்து நட்பு கொள்ள வேண்டும் அதுவே நிலைத்து நிற்கும்.
  26. கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.
  27. ஒருவனை அதிகமாக புகழ்வது அவனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்.
  28. நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!