‘அகப்படும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்’: புகழ்பெற்ற 20 பாரசீகப் பழமொழிகள்!

Date:

  1. அளவற்ற செல்வமுடையவர்களுக்கு, அளவற்ற தேவைகளுண்டு.
  2. காதலின் இன்ப வேதனையை அறியாத நெஞ்சம் நெஞ்சமல்ல.
  3. பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம், அது இல்லாதவனுக்கு கவலை.
  4. சந்தேகம் நுழையும் வாசல் வழியே தான் துணிவும் நம்பிக்கையும் வெளியேறுகின்றன. 
  5. ஆட்டு மந்தையின் அடித் தூசியும் ஓநாயின் கண்ணுக்கு இனிமை தரும்.
  6. திருப்தியுடன் வாழ்ந்தால் நீயே அரசன்.
  7. உப்புச் சுரங்கத்தில் விழுவதெல்லாம் உப்பாகும்.
  8. அறுந்தக் கயிற்றை முடிக்கலாம் ஆனால் முடிச்சு இருக்கும்.
  9. நல்ல கனியிலிருந்து பிழியாமலே சாறு வரும்.
  10. தாராள குணம் உள்ள மனிதன் இறைவனின் நண்பன்.
  11. அறுவடைக்கு தக்கபடி வாழ்ந்து கொள்.
  12. அகப்படும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்.
  13. ஒரு செந்நாய்க்கு மற்றொரு செந்நாயைத் தெரியும். அது போல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடனின் குணம் தெரியும்.
  14. நாம் காணும் உலகம் செழிப்பாக இருக்கிறதா? அப்படியானால் அங்கு கருணையும் இரக்கமும் குடிகொண்டிருக்கின்றன.
  15. வாழ்க்கை என்பது இடைவிடாத குடிவெறி, மகிழ்ச்சி மறைந்த பின்பும் தலைவலி இருந்துகொண்டே இருக்கும்.
  16. மன்னன், மாது, குதிரை இவை மூன்றையும் நம்ப வேண்டாம்
  17. ரோசாப் பூவை எடுப்பவன், முள்ளினால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
  18. கெட்ட நேரமாய் இருந்தால் பாயசம் குடித்தாலும் பல் ஒடிந்து போகும்.
  19. நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு நாள் பிரிவு உண்டு.
  20. உடைந்த கைகளை கொண்டு உழைக்கலாம் உடைந்த உள்ளத்தை கொண்டு உழைக்க முடியாது.

Also Read: ‘எருமை வாங்கும் முன்னே, நெய் விலை கூறாதே’: சிறந்த 60 தமிழ் பழமொழிகள்..!

‘அறிஞருடன் உரையாடுவது நூறு நூல்களைப் படிப்பதற்கு சமம்.’ சீனப் பழமொழிகள்

‘பேச்சு வெள்ளியென்றால், அமைதி தங்கமாகும்’ புகழ்பெற்ற 20 அரேபிய பழமொழிகள்!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!