“எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்” கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் அறிஞர்களின் பொன்மொழிகள்.
- கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா. – மாஜினி
- கல்வியும், வாளுமே ஒரு தேசம் புத்துயிர் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும். – மாஜினி
- கல்விச்சாலையொன்று திறப்பவன் சிறைச்சாலையொன்று மூடுபவன். – விக்டர் ஹூகோ
- கல்வியின் லட்சியம் நல்ல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்பதன்று; நல்ல காரியங்களைச் செய்வதில் ஆசையும் ஆனந்தமும் உண்டாக்குவதேயாகும். – ரஸ்கின்
- கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று; ஒழுக்கத்தை ஒழுக செய்வதேயாகும். – ரஸ்கின்
- பொய்க் கல்வி பெருமை பேசும், மெய்க் கல்வி தாழ்ச்சி சொல்லும். – ரஸ்கின்
- ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே. – ரஸ்கின்
- மிருதுவாக மரம் இழைக்க, நேரான கோடு கிழிக்க, கோணாத சுவர் எழுப்பக் கற்றுக் கொள்ளட்டும். அப்படியானால் எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் கற்பிக்க இயலாத அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். – ரஸ்கின்
- சரியான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும். – ரஸ்கின்
- நடை எழுதவும், இசை பாடவும், உருவம் தீட்டவும் முழு வல்லமை பெற்ற பொழுதே கல்வி முற்றுப் பெறும். – ரஸ்கின்
- கல்வியின் லட்சியம் விஷயங்களை அறிவது அல்ல. வேலைக்கு அடிகோலுவது அல்ல. சான்றோனாகவும் அறிஞனாகவும் செய்வதேயாகும். – ரஸ்கின்
- அறிவு தரும் கல்விக்கு ஆகும் செலவை விட அறியாமைக்கு ஆகும் செலவே அதிகம். – ஆவ்பரி
- கல்வி கற்பிக்க ஒவ்வொருவனிடம் ஒரு மாணவனாவது இருக்கவே செய்கிறான். – ஆவ்பரி
- பிறர் உவக்கும் வண்ணம் நடந்து கொள்வதற்கான ஆசையும் அறிவும் ஏற்படுத்துவதே குழந்தைகளை கெளரவமானவராக வளர்ப்பதன் சாரமாகும். – ஹோம்ஸ்
- கல்வி எதற்காக? நல்ல தொழிலாளி ஆக்குவதற்கே. – ஆவ்பரி
- வாழ்வில் வெகு முக்கியமாய்க் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் எங்ஙனம் வாழ்வது என்பதே. – ஆவ்பரி
- கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம் கற்பதை மறப்பது. – ஆவ்பரி
- எந்தக் கல்வி தேவை? ஒரு மூட்டை நூல்களை வாசித்தலா? அன்று.! அடக்கம், ஒழுங்கு அறம், நீதி இவற்றின் முன்மாதிரிகளே தேவை. – பர்க்
- சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும். – மில்டன்
- இளஞ்சிறார் செவிமடுக்க வேண்டிய மொழிகள் இவையே ‘உனக்கு வேண்டியதை நீயே உண்டாக்கிக் கொள்ளலாம். நீ பட்டினி இருப்பதும் இல்லாததும் உன் முயற்சியைப் பெறுத்ததேயாகும்.’ – மெல்போர்ன்
- இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன். – யுரீப்பிடீஸ்
- மாணவனிடம் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லாத வரை, அவன் செய்ய முடிந்ததையெல்லாம் ஒரு பொழுதும் செய்யப் போவதில்லை. – மில்
- சிறுவர்களுகான பிரமாதமான கல்வி, அறிவு ஊட்டுவதல்ல. நல்ல பழக்க வழக்கங்கள் அமைப்பதேயாகும். – போனால்டு
- மாணவர் அறிவதற்கு உத்தேசிக்கப்பட்டதை மட்டுமே அறியும் ஆசானை விட பயங்கரமான பொருள் ஒன்றும் உலகில் கிடையாது. – கதே
- யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகி விடமாட்டார். – கதே
- மூடர் முன் முற்றக் கற்றவனாகக் காட்சிக் கொள்ள விரும்புகிறவன் முற்றக் கற்றவர் முன் மூடனாகக் காட்டிக் கொள்கிறான். – குன்றிலியன்
- அதிகம் கற்றவரே அற்பமாகவே தெரியும் என்று அறிந்து கொள்ளக் கூடியவர். – ஆவ்பரி
- இரண்டுவிதக் கல்விப்பயிற்சி உண்டு. பிறரிடம் பெறுவது ஒன்று. தன்னிடமே பெறுவது ஒன்று. இரண்டிலும் இதுவே ஏற்ற முடையது. – கிப்பன்
- கல்வியில்லாத ஆன்மா பணி செய்யாத சலவைக் கல். – எடிஸன்
- நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்துவதற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாகச் செய்வதும், அறிந்ததைப் புதியதாகச் செய்வதுமாகும். – தாக்கரே
- அதிகம் படிப்பவன் அகந்தை உடையான், கல்வியைக் காட்டுவதில் கருத்துடையான், அதிகம் பார்ப்பவன் அறிவு உடையான், அயலாருடன் வாழ்வான், அவர்க்கு உதவுவான். – லிச்சென்பரி
- கல்வி கற்பிக்கும் ஆசிரியன் நூலறிவைப் புகட்டும் பொழுது மெய்யறிவை மறந்து விடலாகாது. டெம்பிள் ஆராய்ச்சி முறையை ஒட்டிய கல்வி முறையே இணையற்றதாகும். – பர்க்
- வாழக் கற்பிப்பவன் மரிக்கவும் கற்பிக்கக் கற்றவன்.-யங்
- நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான். – ஸ்காட்
- சான்றோனாக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலே யாகும். அதனால் பெறும் அறிவும் தன்னைப் பிறர் மெச்சும்படி செய்ய மட்டும் கற்றுக் கொண்ட ஒருவித மடமையேயன்றி வேறன்றுமில்லை. – போலிங்புரூக்
ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்!
‘காலத்தின் மதிப்பு தெரிந்தால் உனக்கு வாழ்வின் மதிப்பு தெரியும்’: நெல்சன் மண்டேலா கூறிய சிறந்த…