தனிமை ஒரு கொடூரமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சமூகத்திலிருந்து தனித்திருக்கும் பலரும் உடல் பருமன், இரத்த அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு விரைவில் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதற்கான மாற்று வழிகள் குறித்த ஆய்வில், தனிமை ஒரு மனிதனை மெருகூட்டுவதாக குறிப்பிடுகிறது. அதாவது, அந்த குறிப்பிட்ட மனிதன், தான் என்ன செய்ய வேண்டும், தனக்கு உண்மையில் என்ன தேவைப்படுகிறது என்பதை தனிமை மூலம் அதிகம் உணர்ந்து கொள்ள முடியும். அது அவனை புதிய படைப்புகள் உருவாக்கவும் தூண்டும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனித்திருத்தலுக்கும் சமூகத்திலிருந்து தனித்துவிடுதலுக்குமான வித்தியாசம்
தனித்திருத்தல் மற்றும் சமூகத்திலிருந்து விலகி இருத்தல் இரண்டும், பெரிய வலிகளை தருவதாக மனிதர்கள் உணர்வதாலும், அந்த தனிமையை நாம் புதிய செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலும் அதிக பேர் குழுமியிருக்கும் இடத்தில் எந்த ஒரு வேலையையும் முறையாக செய்து முடிக்க முடியாது.
ஆனால், தனித்திருக்கையில் எந்த தடையும் இல்லாமல் வேலையை செய்து முடிக்கலாம். அதேபோல், செயல்களில் பல நுணுக்கங்கள் அறியவும் இந்த தனிமை வழிவகுக்கிறது.
தனிமையில் இருக்கையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை நேர்மறையான பாதையில் கொண்டு செல்கிறீர்களா அல்லது, எதிர்மறையான பாதையில் கொண்டு செல்கிறீர்களா என்று நிச்சயம் உணர்ந்திட முடியும்.
பலர் தனிமைபடுத்தலுக்கு அஞ்சினாலும், உண்மையில் தனிமையை விரும்பும் பலர் நம்மிடையே உள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தனிமைப்படுத்தப்படுதல் என்பது, சமூகத்திலிருந்து நம்மை ஒதுக்கி வைப்பதாகும், இது மனவலியை ஏற்படுத்தினாலும், நாம் தனித்திருக்கையில் செய்யும் செயல்கள் மூலம் இதையும் எதிர்கொள்ள முடியும்.
யார் தனிமை விரும்பிகள்?
நன்றாக சிரித்து பேசும் தன்மைக்கொண்டவர்கள் தனிமையாக இருக்க விரும்புவதில்லை. கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர்கள், தனித்திருக்கவே விரும்புகின்றனர். இவர்களை நாம் அன்றாட வாழ்க்கையில் சந்தித்திருப்போம். தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் கல்வியில் சிறந்து விளங்குபவராக இருப்பதை பார்க்க முடியும்.
உண்மையில், கூச்ச சுபாவம் கொண்டவர்கள் தனித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள், தங்களுக்கு ஏற்ற குழு ஒன்றை அமைத்துக் கொள்ளலாம்.

அரட்டை மகிழ்ச்சியான மனநிலைக்கு உதவுகிறது.
தனிமையை வெல்வது எப்படி?
தனிமை உங்களுக்காக அதிகம் செய்யத் தூண்டும். அதன்படி இவற்றை செய்து பாருங்கள்.
தனித்திருக்கையில், இரவு உணவிற்கு வெளியில் செல்லுங்கள். இதன் மூலம் சுற்றி இருப்பவர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

2. தனிமையாக திரைப்படங்கள் பார்க்க செல்லுங்கள்
திரைப்படங்கள் பார்க்க ஒரு குழுவாக செல்கையில் முழுவதும் ரசிக்க முடியாது. ஆனால், தனித்திருக்கும் போது உங்களால் முழுவதும் படத்தை பார்க்கவும். அது பற்றிய உண்மையான புரிதலும் ஏற்படும்.
3. உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள்
தனிமையில் நீங்கள் மென்மையாக உணர அவசியமான ஒன்று இசை. அதில், உங்களுக்கு பிடித்த இசையை தெரிவு செய்து கேட்கும் போது மனம் தனிமையை நேசிக்கும். மேலும், உங்களுக்கு பிடித்த பாடகரின் பாடல் நிகழ்ச்சிகளுக்கு செல்லுங்கள். அதன் மூலம் மற்ற மனிதர்களுடன் இணைப்பு ஏற்படுத்தி கொள்ளலாம்.

4. உயரமான இடங்களுக்கு செல்லுதல்
பொதுவாக இயற்கையுடன் நாம் இணைந்திருந்தால், இந்த தனிமை பிரச்சினையாக இருக்காது. காரணம் இயற்கையில், மரங்கள், பறவைகள், விலங்குகள் என்று அனைத்தும் அற்புதமான ஒன்றாகவே இருக்கிறது. அவை உங்களை உற்சாகப்படுத்தும்.
எனவே நீங்கள் உயரமான மலை பாதைகளை தேர்வு செய்து குட்டி நடைபோடலாம்.
5. பயணங்கள்
தனியாக பயணங்கள் மேற்கொள்ளுங்கள். அது உங்களை தன்னிறைவு அடைய செய்யும். ஒரு வேளை தனித்து பயணிப்பது உங்களுக்கு அச்சுறுத்தலாக தோன்றலாம். ஆனால், தனித்து பயணிக்கையில் தன்னம்பிக்கை தைரியம் ஏற்படுகிறது.
இவை எல்லாம் ஒரு பொதுவான அமைப்பு. ஆனால், ஒவ்வொருவருக்கும் கால சூழல்கள் வெவ்வேறு விதத்தில் இருக்கும். அவரவர், மனத்திற்கு எட்டும் செயல்களை தங்களுடன் இணைத்து கொள்ளலாம். ஆனால், தொலைக்காட்சி, கைபேசி போன்ற சாதனங்களில் தங்கள் தனிமையை போக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. ஏனெனில், நாம் பார்க்கும் காட்சிகள் மன அழுத்ததை உண்டாக்கலாம்.
எனவே சரியான வழிமுறையை நீங்களே தெரிவு செய்து அதன்படி தனிமையிலும் வெல்லலாம்.