தமிழகத்தின் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. திமுக தலைவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை கீழே காண்போம்.
- தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்பட இணை ஆட்சி மொழியாக தமிழ் இருக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
- மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.
- தனிநபர் வருமானம் 1,50000 ஆக உயர்த்தப்படும்.
- வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
- மத்திய அரசின் மொத்தவரி 60 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடையத் தேவையான ஊக்கம் கிடைத்திட மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும் , பாரபட்சம் இல்லாமல் நிதி பங்கீடு செய்யப்படும்.
- மத்திய நிதி குழுவின் அமைப்பும் அதன் பணிகளும் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்படும்.
- தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ. 8,000 ஆக நிர்ணயக்கப்படும்.
- பாஜக அரசின் தவறான முடிவுகளால் இன்றைக்கு சிதைந்துப்போன இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்த்துடன் கூடிய பொருளாதார வல்லூநர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைக்கப்படும்.
- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட நிர்வகிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டுவரப்படும்.
- சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகை வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு, முன்பு இருந்ததுபோல் சிலிண்டர் விலை குறைக்கப்படும்.
- வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்ச தொகை வைக்காத காரணத்திற்காக வசூலிக்கப்பட்ட தண்டக் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுகு திரும்ப அளிக்கப்படும்.
- சரக்கு மற்றும் சேவை வரி அதிகபட்சமாக 28 சதவிகிதம் வரை இருப்பதால் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பை போக்கிட ஜிஎஸ்டி வரி விகிதம் உரிய வகையில் மாற்றி அமைக்கப்படும்.
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
- பத்தாம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேர் சாலைப் பணியாளராக பணியமர்த்தப்படுவார்கள்.
- சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
- கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும் – அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- முல்லை பெரியாறு மற்றும் காவிரி ஆற்றில் மேகதாதுவில் புதிய அணைகள் கட்டும் முயற்சிகள் தடுத்து நிற்த்தப்படும்.
- தென்னிந்திய நதிகள் இணைக்கப்படும்.
- 1976-ல் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.
- மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- 10-ம் வகுப்பு வரை படித்த 50,000 கிராமப்புற பெண்கள் மக்கள் நலப் பணியாளராக பணி அமர்த்தப்படுவார்கள்.
- 1964-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பிய அகதிகள் அனைவருக்கும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.
- புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.
- உரிமம் முடிந்த பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்.
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.
- சென்னைக்கு அடுத்து மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணத்திற்கு பட்ஜெட்டில்0.5 விழுக்காடு நிதி ஒதுக்கப்படும். மேலும் புயல் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து பகுதிகளிலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.
- கடலோர சமுதாய மக்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாத்திட புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
- கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
- சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை அனுப்பவர்களை தண்டிக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும்.
- காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அமைக்கப்படும்.
- நீர்வளத்தையும் நிலத்தையும் பாதிக்கும் மீத்தேன் நியுட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்.
- விவசாய தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.
- வேலையிலா திண்டாட்டத்தை போக்க, கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள மத்திய, மாநில அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
- கடந்த 11 ஆண்டுகளாக முடங்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் கட்டணம் முன்பு இருந்தது போல் குறைக்கப்படும்.
- பாலியல் தொழில், உடல் உறுப்புகளுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்.
- பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும்.
திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பற்றி உங்களுடைய கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்.