எவரெஸ்ட் சிகரம் 86 செ.மீ., உயர்ந்துள்ளது: சீனா மற்றும் நேபாளம் அறிவிப்பு

Date:

நமது அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சீன எல்லையில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. 1954ல், இந்தியா நடத்திய கணக்கீட்டின் படி, எவரெஸ்ட்டின் உயரம் 8,848 மீட்டர் ஆக இருந்தது. 8,848 மீட்டர் என்பதே நேற்று வரையிலும் எவரெஸ்ட்டின் உயரமாக உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. பல்வேறு இயற்கை மாற்றங்கள் மற்றும் 2015ல் இமயமலை அருகில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்பட்டது.

இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிட நேபாள அரசு முடிவெடுத்தது. 2 வருடங்களுக்கு முன்பு பணிகளைத் துவங்கிய நேபாள அரசிற்கு சீனாவும் உதவியது.

எவரெஸ்ட் சிகரம்
Credit: telegraph.co.uk

இந்நிலையில் சீனா, நேபாள அரசுகள் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேற்று அறிவித்தன. அதன்படி எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரமானது 8,848.86 மீட்டர் என்று அறிவிக்கப்பட்டது. இது முன்பு இருந்ததை விட சுமார் 3 அடி (0.86 மீட்டர்) அதிகரித்திருக்கிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!