இத்தாலியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 2000 ஆண்டு பழமையான தேர் கண்டுபிடிப்பு: முழு விவரம்!

Date:

இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான நான்கு சக்கர தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரும்பு, வெண்கலம் மற்றும் மரங்களால் அலங்கரிக்கப்பட்ட நான்கு சக்கர தேர், பாம்பீ (Pompeii) நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில், அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேரை அந்தக்காலத்தில் திருமணம், திருவிழாக்கள் போன்ற சந்தோஷமான நிகழ்வுகள் மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

இந்த தேரில் அமைந்துள்ள இரும்புக் கூறுகள், அழகான பித்தளை மற்றும் டின் உலோக வேலைப்பாடுகள், கயிறுகள், மலர் அலங்காரங்கள் மற்றும் சிவப்பு மர பேனல்கள் போன்றவை காண்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தேரின் அருகில் மூன்று குதிரைகளின் எச்சங்கள் இருந்துள்ளன. இது ஒரு கட்டிட தளத்தின் உள்ளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பெரிய அளவில் சேதம் எதுவுமில்லாமல் பாதுகாப்பாக இருந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில், கொள்ளையர்கள் கலாச்சார ரீதியாக முக்கியமான பல கலைப்பொருட்களை திருடியதும், சேதப்படுத்தி இருந்ததும் கண்டறியப்பட்டது. அதேபோன்று, கடந்த 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு காவல்துறை விசாரணையானது, 140 க்கும் மேற்பட்ட கொள்ளையர்களைக் கைது செய்வதற்கும் சுமார் 2,000 பழங்கால கலைப்பொருட்களை மீட்பதற்கும் வழிவகுத்தது.

Pompeii old chariot006
Credit: Archaeological Park of Pompeii

இதுகுறித்து இத்தாலியின் கலாச்சார பாரம்பரிய அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் பாம்பீயின் தொல்பொருள் பூங்காவின் அதிகாரிகள் கூறும்போது, “இந்த இடத்தில் உள்ள பல அரிய கலை பொருட்கள் பழங்காலத்தில் திருடப்பட்டிருந்தாலும், பங்களாவின் சுவர் இடிந்து தேரை மூடியிருந்ததால் 21 ஆம் நூற்றாண்டின் பழங்காலத் தேர் திருடர்களிடமிருந்து தப்பியிருக்கிறது என்றனர். குறிப்பாக, தேர் கண்டறியப்பட்ட இடத்தின் அருகில் அவர்கள் சுரங்கங்கள் தோண்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தாலியின் தென் பகுதியில் உள்ள பாம்பீ நகரானது, கி.பி.79ல் வெசுவியஸ் மலையில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் காரணமாக முழுவதும் அழிந்து சாம்பலானது. எனவே, அங்கு வாழ்ந்த மக்களின் நாகரீகம் மற்றும் வாழ்க்கை முறை இன்று வரை பாதுகாக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாம்பீ நகரில் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும், ரதங்கள், விவசாய பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டாலும் அலங்கரிக்கப்பட்ட தேர் கண்டுபிடித்தது, இதுவே முதல் முறை என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தேரின் உள்ளமைப்புகள் அதைச் சுற்றியுள்ள அறைகளையும் பதிவு செய்ய விஞ்ஞானிகள் போட்டோகிராமெட்ரி மற்றும் லேசர் ஸ்கேனிங்கைப் பயன்படுத்தினர். அவர்கள் தேரின் எச்சங்களை தொல்பொருள் பூங்காவின் ஆய்வகத்திற்கு மாற்றினர். அங்கு மீட்டமைப்பாளர்கள் உதவியுடன் அதன் உலோக பாகங்களிலிருந்து அதிக எரிமலை பொருட்களை அகற்ற வேலை நடைபெற்று வருகிறது.

Pompeii old chariot002 2
Credit: Archaeological Park of Pompeii

இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தேரில் பெரும்பாலானவை அப்படியே தப்பியுள்ளன. இருப்பினும், அதில் இருக்கும் பொருட்கள் எளிதில் உடையக்கூடியவை. தேரின் தண்டு மற்றும் மேடையின் வடிவங்கள், அவை நீண்ட காலமாக அழுகிய மரத்தால் செய்யப்பட்டவை மற்றும் அதன் கயிறுகளின் முத்திரை சாம்பலில் இருக்கும் வெற்றிடங்களில் பிளாஸ்டரை செலுத்துவதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன என்றனர்.

நான்கு சக்கர தேரின் சடங்கு பாணியில், கிரேக்க தோற்றம் கொண்டிருக்கிறது. அதன் அலங்காரங்களில் கிரேக்க கடவுளான ஆசை மற்றும் பாலினத்தின் ஈரோஸுடன் தொடர்புடைய சத்திரியர்கள் மற்றும் நிம்ஃப்களின் புள்ளிவிவரங்களைக் காட்டும் பதக்கங்கள் உள்ளன. இருப்பினும், “இது திருமணத்துடன் தொடர்புடைய சடங்குகளுக்காகவும், மணமகளை தனது புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்ட தேராக இருந்திருக்கக்கூடும் என்பதற்கான உறுதியான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை” என்று ஆய்வாளர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாம்பீயில் உள்ள தொல்பொருள் பூங்காவானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகின்றது. இது புதைக்கப்பட்ட பண்டைய நகரத்தின் 170 ஏக்கர் (69 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால், அதில் சுமார் 50 ஏக்கர் (20 ஹெக்டேர்) இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அசாதாரண பழமை வாய்ந்த தேர் கண்டுபிடிப்பு இத்தாலியில் இதுவே முதல் முறை எனவும், இனி வரும் நாட்களில் அங்கு வாழ்ந்தவர்களின் பல உருவங்கள் மற்றும் பழமையான வடிவமைப்புகள் பற்றிய இன்னும் பல தகவல்கள் நமக்கு தெரியவரும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!