பிரேசிலில் கொரோனா பாதித்தவர்களுக்கு மனித தொடர்பைப் பிரதிபலிக்கும் “அன்பின் கைகள்”

Date:

COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் தனிமைப்படுத்திக்கொள்வதே முக்கியமான ஒன்று. நோயாளிகள் தீவிர சிகிச்சை வார்டுகளில் தனிமைப்படுத்தப்படுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள்.

பிரேசிலின், சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள சாவோ கார்லோஸ் என்ற சிறிய நகரத்தில் இரண்டு செவிலியர்கள், ஒரு மி.மீ லேடெக்ஸ் கையுறைகள் மூலம் மனித தொடுதலைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

செமி அராஜோ குன்ஹா மற்றும் வனேசா ஃபார்மென்டன் ஆகியோர் சாண்டா ஃபெலிசியா அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் போது அவர்கள் லேடெக்ஸ் மருத்துவ கையுறைகளை ஒரு மருத்துவமனையில் உள்ள வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி, நீர் பலூன்களைப் போலக் கட்டிக்கொள்கிறார்கள். இதனை அவர்கள் “அன்பின் சிறிய கைகள்” என்றழைக்கிறார்கள்.

hands of love
Credit: REUTERS/Amanda Perobelli

COVID-19 க்கு எதிராக தனது உயிருக்கு போராடும் ஒரு மயக்கமுள்ள மனிதனின் மீது கையுறைகளை எவ்வாறு வைக்கிறார்கள் என்பதை குன்ஹா விளக்கினார். கையின் இரு பக்கங்களிலும் ஒரு கையுறை வைத்தார். “யாரோ அவர்களுடன் கைகளைப் பிடித்திருப்பது போல் நோயாளி ஆறுதலடைகிறார்” என்று ஃபார்மென்டன் கூறினார். ஒரு சிறிய மருத்துவமனை அறையைப் பகிர்ந்து கொள்ளும் பல நோயாளிகளில் இந்த மனிதனும் ஒருவர். ஒவ்வொரு நபரும் உயிரணுக்களைக் கண்காணிக்கும் இயந்திரங்களின் வரிசைக்கு இணைத்துவிட்டார்கள்.

COVID-19 தற்போது அசுர வேகத்தில் அதிகரித்து வருவதால், இரண்டு செவிலியர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த முறையை உருவாக்கினர்கள். பிரேசில் இப்போது தினசரி சராசரி COVID-19 இறப்புகளில் உலகில் முன்னிலை வகிக்கிறது மற்றும் மொத்த இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது.

நோயாளிகளின் கைகளை வெப்பமயமாக்குவது உணர்ச்சி ரீதியான ஆதரவைத் தாண்டி பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இரத்த ஓட்டம் அதிகரித்தது குளிர்ந்த கைகள் நோயாளிகளின் இரத்த ஆக்ஸிஜன் அளவை தவறாக காண்பிப்பதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாக பொய்யாகக் காட்டுகின்றன. இந்த கையுறை முறையில் தவறு நடக்காது என்பதை உறுதி செய்கின்றன. நகரைச் சுற்றியுள்ள மருத்துவமனைகள் இப்போது நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

உடனடி முடிவுகளை வழங்குவதற்காக ஊழியர்கள் “அன்பின் கைகளை” பாராட்டினர்.

“நோயாளிகள் எவ்வளவு விரைவாக குணமடைகிறார்கள் என்று குன்ஹா கூறினார்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!