ஒரு காலத்தில் ஐ.ஐ.டி பேராசிரியர் இப்போது விவசாயி !!

Date:

இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரியான ஐ.ஐ.டி டெல்லியில் (IIT – Delhi) பேராசிரியராக இருந்த அலோக் சாகர் (Alok Sagar) தற்போது பழங்குடியினருடன் விவசாயம் செய்து வருகிறார்.

சாகர் ஐ.ஐ.டி டெல்லியில் இளங்கலைப் பொறியியலும், உலகப்புகழ் பெற்ற ஹவுஸ்டன் (Houston) பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவராவார்.

alok sagar
Credit: Aaj Tak

பேராசிரியர்

சாகர் டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரியும் போது கிராமப்புற மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறார். மாணவர்களிடம் இது குறித்த அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். விவசாயிகளின் துயர் துடைக்கத் தானே களத்தில் இறங்குவது என முடிவு செய்த அன்றே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

alok sagar
Credit: Wahgazab
அறிந்து தெளிக!
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சாகரின் மாணவர்.

32 வருட விவசாயம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல பழங்குடியினருடன் வசிக்கத் துவங்கிய சாகர் கடந்த 24 வருடங்களாக கோச்சாமு என்னும் கிராமத்தில் 750 பழங்குடி மக்களுடன் வாழ்ந்து வருகிறார். இதுவரை 50,000 திற்கும் அதிகமான மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார் சாகர். சுற்றியுள்ள எல்லா பழங்குடியின மக்களின் மொழியையும் இவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

alok sagar
Credit: patrika

விவசாயம் செய்ய இயலாத மக்களுக்கு விதை நெல்களை இலவசமாகக்  கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரைப்பற்றித் தெரிந்து கொண்ட மக்கள் இவரை வீட்டிற்குப் போகும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் சாகர் அதை மறுத்து விட்டார்.

கல்வி என்பது பணம் ஈட்டுவதல்ல!!

“கல்வி என்பது சக மனிதரின் துன்பத்தைப் போக்குவது மற்றும் எளிய மக்களுக்குச் சேவை செய்வதே” என சாகர் அடிக்கடி கூறுவதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சியோ, பொருளாதார, கட்டமைப்பு வளர்ச்சியோ ஏழைகளைச் சென்றடைவதில்லை. அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் மூலமே உண்மையான வளர்ச்சியை அடைய முடியும் என்கிறார் சாகர்.

Alok sagar
Credit: Patrika

எளியவர்களைக் காப்போம் என வெற்றுக் கூச்சலிடுவோர் மத்தியில் சாகர் ஒரு மகத்தான மனிதர். அவரிடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு சைக்கிள், மூன்று ஜோடி உடைகள் மட்டுமே. கல்வி என்பது வியாபாரப் பொருளென மாறிவிட்ட நிலையில் இம்மாதிரியான மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம் தான். ஆனாலும் ஏழைகளை, வறுமையில் வாடுபவர்களை நாம் நினைத்தால் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு சாகரின் வாழ்க்கையே சான்று.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!