நம்மில் வெகுசிலரைத் தவிர அனைவருமே அசைவ விரும்பிகள் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அசைவ உணவு விருப்பமாக இருக்கும். பல வகையான அசைவ உணவுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானோருக்கு விருப்பமானது ஆட்டிறைச்சி தான்.
உண்ணும் உணவு சத்தானதாக இருக்கவேண்டும். வெறும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என சைவ உணவுகள் சாப்பிட்டாலும் உடலுக்கு தேவையான சத்து கிடைக்கும். எனினும், உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு போன்ற சத்துக்களை 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அசைவம் தான் தருகிறது. ஆம்! தமிழ்நாட்டில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அசைவம் தான் சாப்பிடுகின்றனர்.
சிலர் மட்டன் என்றால் விரும்பி வழக்கத்திற்கு அதிகமாகவே ஒரு பிடி பிடிப்பார்கள். இவ்வாறு ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

Warning: ஆட்டிறைச்சியில் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனால், மருத்துவர்கள் ஆட்டிறைச்சியை இதய நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதில்லை. நியோதமிழும் பரிந்துரைக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கிராமங்களில் இன்றும் மக்கள் ஆட்டிறைச்சியின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு காரணத்துக்காக பயன்படுத்துகின்றனர். காரணம், ஆட்டின் தலை, கால்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை என ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்கு மருத்துவப் பயன் நிறைந்ததாக உள்ளது.
ஆட்டுக்கால்கள்
பொதுவாக ஆட்டுக்கால் சூப் மிகவும் பிரபலமானது. தள்ளுவண்டிக்கடைகளில் கூட கிடைக்கக்கூடியது. எனினும் தூய்மையான முறையில் வீட்டிலேயே ஆட்டுக்கால்களை சூப் வைத்துக் குடித்தால், எலும்புகளுக்கு பலமும், கால்களுக்கு நல்ல ஆற்றலும் கிடைக்கும். உடம்பில் ஏற்படும் வலிகள் சரியாகும். இதனால் தான் எழும்பு தொடர்பான பிரச்சினை, மற்றும் சோம்பேறிகளாக இருப்பவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.
தலை
ஆட்டின் தலைப் பகுதியும் எலும்பினை வலுப்படுத்தக்கூடியது. தலையை சாப்பிடுவதால் இதயம் சார்ந்த கோளாறுகளும், அதனால் ஏற்படும் வலிகளும் சரியாகும். மேலும், மனிதனின் குடலை வலிமையாக்க ஆட்டின் தலை சிறந்தது.
கண்
ஆட்டின் கண்களை சாப்பிட்டால் பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு பார்வை திறன் அதிகரிக்கும். மீன் கண்களை சாப்பிட்டாலும் நமது கண் பார்வை அதிகரிக்கும்.
மூளை
ஆட்டின் மூளையைச் சாப்பிடுவதும் நல்லது. உடம்பில் தாதுச் சத்துக்களை அதிகமாக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். மனித மூளை நன்கு வலிமை பெறும்.
மார்பு
ஆட்டின் மார்புப் பகுதி (நெஞ்செலும்பு) இறைச்சியை உட்கொள்வதால் சளித்தொல்லை தீரும். உடலுக்கு பலத்தை தரும். நெஞ்செலும்பு சூப் வைத்தும் குடிப்போர் பலர் உள்ளனர். மார்புப் பகுதியில் புண் இருந்தால் அவற்றை குணப்படுத்தக்கூடியது.
ஈரல்
ஆட்டின் ஈரல் பகுதி இறைச்சி உடலின் வெப்பத்தைக் குறைக்கிறது. நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும்.
சிறுநீரகம்
ஆட்டின் சிறுநீரகத்தை உண்பதனால் பல்வேறு நன்மைகள் உள்ளன. இதனால், இடுப்புக்கும், சிறுநீரகச் சுரப்பிக்கும் வலிமை ஏற்படும். இடுப்பு வலியை சரி செய்யக்கூடியது. தாது சத்துக்கள் அதிகமாகும்.
எனவே, சிக்கன் விரும்பிகள் கூட இனி ஆட்டிறைச்சி உண்டு பழகுங்கள்!
Also Read: புரதம் நிறைந்த 10 சிறந்த உணவுகள்
வைட்டமின் பி12 குறைபாடு: இந்த 9 அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றனவா?
சரிவிகித உணவு என்றால் என்ன..? எந்த உணவை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது..?