இந்தியாவின் பாதுகாப்பான கார் இது தான்!!!

Date:

ஜெர்மனியின் முனிச் (MUNICH) பகுதியில் இருக்கிறது  ADAC பரிசோதனை நிறுவனம். 1903ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் கார்களுக்கான பல்வேறு பரிசோதனைகளைச் செய்து அதன் முடிவுகளின் படி சான்றளிக்கும். உலகின் முன்னணி கார்கள் இங்குதான் பரிசோதனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த டாடா குழுமம் தங்களது எஸ்.யூ.வி  காரான நெக்ஸானை பரிசோதனைக்கு உட்படுத்தியது.

0 578 872 0 70 http cdni.autocarindia.com ExtraImages 20180220030256 Tata Nexon Aero
CREDIT: AUTOCAR INDIA
அறிந்து தெளிக!
கடந்த ஆண்டு செப்டம்பரில் டாடா நிறுவனம் நெக்ஸானை அறிமுகப்படுத்தியது. மாருதியின் விட்டாரா (Vitara), ஃப்ரீசா (Brezza) மற்றும் ஃபோர்டின் எகோ ஸ்போர்ட்டிற்கு (Ford Eco sport)  போட்டியாக இக்கார்  களமிறக்கப்பட்டது என்றே சொல்லலாம்.   சிறிய அளவிலான எஸ்.யூ.வி  ரக தயாரிப்பில் வெளிவந்த நெக்ஸான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பெட்ரோல், டீசல் என இருவகையிலும் நெக்ஸான் அறிமுகப்படுத்தப்பட்டது.

பரிசோதனை 

ADAC க்கென பரிசோதனை வழிமுறைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை. அதன் விதிமுறைகளின் படி மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் காரை இயக்கச் செய்வர். தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் ஒன்றில் கார் மோதும்போது,  ஏற்படும் சேதத்தின் அளவுகளை வைத்து தரச்சான்றிதழ் அளிக்கப்படும். இப்படி பரிசோதிக்கப்பட்ட நெக்ஸானிற்கு 4 ஸ்டார்களை அளித்திருக்கிறது அந்நிறுவனம்.  இதன் மூலம் டாடா நெக்ஸான் இந்தியாவின் பாதுகாப்பான காராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்த சான்றிதழைப்  பெற்ற கார்கள்: 
  • டாடா நிறுவனத்தின் ஸ்செஸ்ட் (Tata Zest)
  •  டோயோட்டா நிறுவனம் தயாரித்த எட்டியோஸ் (Toyota Etios)
  •  வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின்  போலோ (Volkswagen Polo).

நெக்ஸான் இவ்விருதை பெறுவதற்கு முக்கிய காரணம்,  அதில் பொருத்தப்பட்டுள்ள  ஏர் பேக்குகள், சீட் பெல்ட் வித் ப்ரி டென்ஷனர் ஆகும். இப்பரிசோதனை  எஞ்சின் மற்றும் காரின் முன்பகுதியில் கடும் சேதத்தை  விளைவித்தாலும்,  கேபின் உள்ளே எவ்வித சேதமும் ஏற்படவில்லை. A பில்லரில் அதிக  அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும்,  அதன் உறுதித்தன்மையின் காரணமாக எவ்வித வளைவோ, உருமாற்றமோ நடைபெறவில்லை!!

CRASH TEST
CREDIT: RUSHLANE

சர்வதேச அளவில் கார்களுக்கான பாதுகாப்பு மற்றும் பரிசோதனை மையமான NCAP நெக்ஸானை ஆய்வு  செய்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை,  நெக்ஸானில் பயணிகளுக்கு கழுத்து மற்றும் தலையில் தாக்குதல் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறுகிறது. மேலும், பயணிகளின் நெஞ்சுப்பகுதிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன எனவும்  குறிப்பிட்டுள்ளது.

நான்கு வருடம் கழித்து இந்தியாவிலேயே  பாதுகாப்பான கார் என  NCAP யால் சான்றிதழ் பெற்ற முதல் கார் என்ற பெருமையும் நெக்ஸானயே சேரும்.

NCAP யின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 25 கார்களுடன் போட்டியிட்டு நெக்ஸான் முதலிடத்தைத் தட்டிச் சென்றிருக்கிறது. விதிமுறைகள்  மாற்றப்பட்ட பின் இந்தியாவில் பல கார்கள் இச்சான்றிதழுக்காகப்  போட்டியிட்டு தோல்வியைத்  தழுவியது. நான்கு வருடம் கழித்து இந்தியாவிலேயே  பாதுகாப்பான கார் என  NCAP யால் சான்றிதழ் பெற்ற முதல் கார் என்ற பெருமையும் நெக்ஸானயே சேரும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!