பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கலைநயமிக்க செட்டிநாட்டு வீடுகள்

Date:

செட்டிநாடு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கலைநயமிக்க பெரிய அரண்மனை போன்ற வீடுகளும் அங்கு செய்யக்கூடிய உணவுவைகளும் தான்.

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியை சுற்றிய பகுதிகளில் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை கொண்ட 76 ஊர்களை கொண்ட பகுதியே செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமிக்க கலைநயம் கொண்ட வீடுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்…

செட்டிநாடு பெயர் வரக் காரணம்

இந்த பகுதியில் தனவணிகர்கள் என்றும் நகரத்தார் என்றும் அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரும்பாலோர் வாழ்வதால் இப்பகுதி செட்டிநாடு என அழைக்கப்படுகிறது.

பிரமாண்ட வீடுகள்

கட்டிடக்கலையில் மிகவும் புகழ்பெற்றது செட்டிநாடு வீடுகள். இந்த வீடுகள் 18 ம் நூற்றாண்டு முதல் 20 ம் நூற்றாண்டு தொடக்கம் வரை கட்டப்பட்ட வீடுகள் மிகவும் புகழ்பெற்றவை. ஆயிரம் சன்னல்கள் கொண்ட வீடுகளும் இங்கு பகுதியில் உள்ளன. இங்கு உள்ள வீடுகள் மண்டபம் போன்று காணப்படும் என்பதால் மக்கள் தங்கள் வீட்டிலேயே தங்கள் வீட்டு விழாக்களை நடத்துவதையே வழக்கமாக கொண்டார்கள். இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு உள்ள வீடுகள் குறைந்தது 30 அறைகள் கொண்டதாக உள்ளது. வீடுகளை வசீகரிக்க சிவப்பு, பச்சை, மஞ்சள் என வண்ணங்களை கொண்டு அலங்கரித்து இருக்கிறது. செட்டிநாடு வீடுகள் 1 ஏக்கர் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. வீட்டுக்கு முன் வாசல் ஒரு தெருவிலும் பின் வாசல் மற்றொரு தெருவிலும் அமைந்துள்ளது. பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும் வகையில், இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன. மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் தரையின் உயரம் 5 அடி வரை மேலெழுப்பி கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் நடுவே பெரிய வானவெளி முற்றம் அமைப்பு உள்ளது. வீட்டுக்குள் காற்று மற்றும் வெளிச்சத்தை வானவெளி கொண்டு வருகிறது. வீட்டின் முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும்.

பர்மா தேக்கு

chettinadu min
hindutamil

வீடு முழுவதும் பல தூண்கள் உள்ளன. இந்தத் தூண்கள் பர்மா தேக்கில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீளமான தேக்குமரங்களை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மாவில் இருந்த காலத்தில் சங்கிலியால் கப்பல்களில் கட்டி கடலில் மிதக்கவிட்டு நாகப்பட்டிணம் துறைமுகம் வழியாக கொண்டு வந்த‍தாக கூறுகின்றனர். வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலைநயத்துடன் அமைந்திருக்கும்.

வீட்டின் நுழைவு வாசலின் இருபுறமும் பெரிய விசாலமான திண்ணை இருக்கும். அதில் கம்பீரமான மரத் தூண்கள் இருக்கும். முன் வாசல் கதவும் நிலையும் மிக நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும். இந்த நிலை ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மாறியுள்ளது. தெய்வச் சிலைகளை நிலையின் மேல்புறத்தில் செதுக்கியிருகிறார்கள். வீட்டின் முகப்பு திண்ணை (பட்டாலை) என அழைக்கப்படுகின்றது. பட்டாலையைத் தாண்டினால் வருவது வளவு (முற்றம்) ஆகும்.

வீட்டில் தேக்குமரத்தால் ஆன பெரிய கதவுகள், மரத்தினால் ஆன பீரோக்கள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள் கொண்டதாக உள்ளது. ஆங்காங்கு உள்ள நிலைகளில், இராமாயண, மகாபாரதக் காட்சிகளை வரிசையாகச் செதுக்கி உள்ளனர். தற்காலத்தில் சில வீடுகளை சற்று மாற்றியமைத்து நட்சத்திர விடுதிகளாக பயன்படுத்துகின்றனர்.

கானாடுகாத்தான் அரண்மனை

kanadukathan Palace min
hindutamil

கானாடுகாத்தான் அரண்மனை போன்ற சில வீடுகளில் கூடுதலாக அறைகள் இருக்கும். கானாடுகாத்தானில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வீடு செட்டிநாட்டு அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. கானாடுகாத்தான் அரண்மனையில் திரைப்படங்களும் எடுத்துள்ளனர். 

திரைப்படங்கள்

ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சின்னஜமீன், ராஜகுமாரன், அரண்மனைக்கிளி, சாமி, சிங்கம், பெரியார், தவமாய் தவமிருந்து, வேங்கை, திருப்பதி, திருப்பாச்சி,பிரிவோம் சந்திப்போம் ஆகிய படங்கள் செட்டிநாடு வீடுகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: துபாயில் கட்டப்பட்டு வரும் உலகின் அடுத்த அதிசயம்!!

கட்டடம் இப்படியும் கட்டலாம் – சீன பொறியியலாளர்கள் சாதனை!!

உலகின் மிக உயரமான 10 கட்டிடங்கள் இவைதான்..

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!